Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மக்களே கவனம் ..இது மோசடி செயலாம் தமிழக மின்சார வாரியம் எச்சரிக்கை

மக்களே கவனம் ..இது மோசடி செயலாம் தமிழக மின்சார வாரியம் எச்சரிக்கை

By: vaithegi Tue, 31 Oct 2023 11:11:40 AM

மக்களே கவனம் ..இது மோசடி செயலாம்  தமிழக மின்சார வாரியம் எச்சரிக்கை

சென்னை: ஈ.பி பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருக்கவும், அது மோசடி செயல் என எச்சரிக்கை ... கடந்த சில நாட்களாகவே சில மின்நுகர்வோர்களுக்கு மோசடி குருஞ்செய்தி ஒன்று வந்து உள்ளது.

அதில் நீங்கள் ஈ.பி பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்து உள்ளது. இதனை நம்பிய சில மின்நுகர்வோர்கள் அந்த குருஞ்செய்தியில் வந்த எண்ணுக்கு பணத்தை அணுப்பி தங்களது பணத்தை இழந்து உள்ளனர். இதையடுத்து இது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

tamil nadu electricity board,sms ,தமிழக மின்சார வாரியம் ,குறுஞ்செய்தி

இந்நிலையில், ஈ.பி பில் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருக்கவும், அது மோசடி செயல் என்று தமிழக மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை பதிவில், இது மாதிரியான குருஞ்செய்தி வந்தால் பதட்டம் அடைய வேண்டாம்.

மேலும் உங்கள் பில் நிலைப்பாடு சரி பார்க்கவும். அந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம். இணைய லிங்கக்கை கிளிக் செய்ய வேண்டாம். உடனடியாக 1930 ஐ அழைத்து புகார் அளிக்கவும். உறவினர்கள், நண்பர்களுக்கு தகவலை பகிரவும். இது ஒரு மோசடி மெசேஜ். உடனடியாக சைபர் கிரைமில் புகார் அளிக்கவும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :