கெளரவமான அரசியல் தீர்வை கோரி கவனயீர்ப்பு போராட்டம்
By: Nagaraj Sat, 22 Oct 2022 9:21:25 PM
யாழ்ப்பாணம்: கவனயீர்ப்பு போராட்டம்... வடக்கு – கிழக்கு மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 82ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொலிகண்டி பகுதியில் உள்ள பாலாவி முகாம் பகுதியில் போராட்டம் இடம்பெற்றது.
இதன் போது தமது சொந்த நிலங்களை விட்டு பல வருடங்களாக இடம் பெயர்ந்து
முகாம்களில் தங்கியுள்ள தம்மை தமது சொந்த நிலங்களில் குடியேற்ற அரசு
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த
100 நாட்ள் செயல் முனைவின் 82ஆம் நாள் போராட்டத்தில் பாலாவி முகாமில் உள்ள
பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் என பலர்
கலந்து கொண்டனர்.
Tags :
youth |