விருதுநகரில் வருகிற ஆக.11 வேலைவாய்ப்பு முகாம்
By: vaithegi Thu, 10 Aug 2023 11:10:39 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டு மையம் சார்பாக வருகிற ஆகஸ்ட் 11-ம் தேதி அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அறிவிப்புகள் வெளியீடு ...
தமிழக அரசு மாநிலத்தில் உள்ள படித்த மற்றும் கல்வித் தகுதி கொண்ட இளைஞர்களுக்கான தகுதி வாரியான வேலை வாய்ப்பு முகாம்களை மாவட்ட வாரியாக அடிக்கடி நடத்தி கொண்டு வருகிறது.
அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 11-ம் தேதி அன்று விருதுநகர் மாவட்டம் சூலைக்கரையில் மைக்ரோ வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் சார்பில் நடக்கவுள்ளது.இதையடுத்து காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடக்க உள்ளது.
இதில் 15 இருக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருநூறுக்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான பணியாளர்களை நியமனம் செய்ய உள்ளனர். 8 முதல் 12 -ம் வகுப்பு வரை அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ போன்ற கல்வி தகுதி கொண்டவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.
மேலும் இது குறித்த மேலும் தகவல்களை https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/312308090013 என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.