Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சமயநல்லூர் மின் கோட்டத்தில் ஆகஸ்ட் 11 மாதாந்திர பராமரிப்பு பணி .. மின் விநியோகம் தடை

சமயநல்லூர் மின் கோட்டத்தில் ஆகஸ்ட் 11 மாதாந்திர பராமரிப்பு பணி .. மின் விநியோகம் தடை

By: vaithegi Tue, 09 Aug 2022 5:56:57 PM

சமயநல்லூர் மின் கோட்டத்தில் ஆகஸ்ட் 11 மாதாந்திர பராமரிப்பு பணி  .. மின் விநியோகம் தடை

சமயநல்லூர் : தமிழகத்தில் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் தவறாது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பராமரிப்பு பணிகளின் போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் வயர்களை சரி செய்தல், பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

எனவே இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும், மின் பயனர்களின் பாதுகாப்பிற்காகவும் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அப்பகுதி செயற்பொறியாளர்கள் மூலம் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பும் செய்கின்றனர்.

அந்தவகையில் ஆகஸ்ட் 11ம் தேதி மதுரை மாவட்டம் சமயநல்லூர் மின் கோட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் யு.உசிலம்பட்டி, மறவர்பட்டி, வலையபட்டி, ராம கவுண்டன்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, சின்ன பாலமேடு, சுக்கம்பட்டி, கோணாம்பட்டி,

power supply interruption,samayanallur ,மின் விநியோகம் தடை,சமயநல்லூர்

மேலும் சாத்தியார் அணை, ஏர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி ஆகிய பகுதிகளால் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து கோடாங்கிபட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், முடுவார்பட்டி, குறவன் குளம், ஆதனூர், பாலமேடு, அலங்காநல்லூர், சுகர் மில், பண்ணைகுடி ஆகிய பகுதிகளிலும்

அழகாபுரி, புதுப்பட்டி, சின்ன கவுண்டம்பட்டி, சிறுவாலை, அம்பலத்தடி, பிள்ளையார்நத்தம், மீனாட்சிபுரம், இடையபட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிபட்டி, கீழ சின்னம்பட்டி ஆகிய பகுதிகளிலும் ஆகஸ்ட் 11ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Tags :