Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திண்டுக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 18 மின்விநியோகம் நிறுத்தம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 18 மின்விநியோகம் நிறுத்தம்

By: vaithegi Wed, 17 Aug 2022 7:02:23 PM

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 18 மின்விநியோகம் நிறுத்தம்

திண்டுக்கல் : தமிழகத்தில் மாதம் ஒருமுறை அந்தந்த மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையத்தில் மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளில் உள்ள பழுதுகளை சரி செய்யும் பணியும், அதன் மீது படர்ந்திருக்கும் செடி, கொடிகளை அகற்றும் பணி போன்ற பணிகள் மின் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்படும்.

ஏனெனில் மின் கம்பங்களில் இருந்து சீரான மின் விநியோகம் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த பணிகள் மின்வாரிய ஊழியர்களை கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.

power outage,dindigul ,மின்விநியோகம் நிறுத்தம் ,திண்டுக்கல்

இதை அடுத்து இப்பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்படும். மேலும், மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் குறித்த அறிவிப்புகளும் முன்னரே சென்று விடும்.

அதன்படி வள்ளிப்பட்டி துணை மின்நிலையத்தில் ஆகஸ்ட் 18-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை அம்மாபட்டி, ராமகிரி, தலிப்பட்டி, மல்லப்புரம், உக்குவார்பட்டி, வாணிக்கரை, கூம்பூர், வள்ளிப்பட்டி, அழகாபுரி, சத்திரப்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, கரிக்காலி, பல்லாநத்தம், தாதா நாயக்கனூர், இடையபட்டி, பூசாரிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் மின் விநியோகம் தடை என உதவி செயற்பொறியாளர் பிச்சை அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :