Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்டு 20 மின் விநியோகம் தடை

By: vaithegi Thu, 18 Aug 2022 5:51:41 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்டு 20  மின் விநியோகம் தடை

தூத்துக்குடி : தமிழகத்தில் மாதம் ஒருமுறை அந்தந்த மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையத்தில் மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளில் உள்ள பழுதுகளை சரி செய்யும் பணியும், அதன் மீது படர்ந்திருக்கும் செடி, கொடிகளை அகற்றும் பணியும் மின் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்படும்.

எனவே இப்பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்படும். அதன்படி நாளை மறுநாள் (ஆகஸ்டு 20) தூத்துக்குடி மாவட்டம் அருகே உள்ள முத்தையாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் அங்கிருந்து மின் விநியோகம் பெறக்கூடிய பகுதிகளுக்கு மின் தடை செய்யப்படவுள்ளதாக அம்மாவட்ட மின்வாரிய சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

power supply interruption,thoothukudi ,மின் விநியோகம் தடை,தூத்துக்குடி

இதனால் முத்தையாபுரம், பாரதிநகர், அத்திமரப்பட்டி, அனல்மின்நகர் பகுதி, கேம்ப்-1, கேம்ப்-2, துறைமுகம் மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதிகள், தோப்புத்தெரு, வடக்கு தெரு, முள்ளக்காடு, பொட்டல்காடு, அபிராமிநகர், சுனாமிநகர், சவேரியார்புரம் போன்ற பகுதிகளில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை தூத்துக்குடி முத்தையாபுரம் துணை மின்நிலைய செயற்பொறியாளர் சாமுவேல் சுந்தர்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Tags :