- வீடு›
- செய்திகள்›
- தமிழகத்தில் பகுதி நேர முதலாமாண்டு பொறியியல் படிப்பு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க ஆகஸ்ட் 3 இறுதி நாள்
தமிழகத்தில் பகுதி நேர முதலாமாண்டு பொறியியல் படிப்பு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க ஆகஸ்ட் 3 இறுதி நாள்
By: vaithegi Mon, 01 Aug 2022 3:14:18 PM
தமிழகம் : தமிழகத்தில் பகுதி நேர பி.இ. படிப்புக்கு1109 போ் விண்ணப்பித்துள்ள நிலையில் ஜூலை 30 ஆம் தேதி வரையில் 609 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
மேலும் இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் பி.இ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் வாயிலாக பதிவு செய்வதற்கு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையத்தில் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணைய வழியில் சமா்ப்பிக்கலாம் என மாணவா் சோ்க்கை ஒருங்கிணைப்பாளா் கல்பனா அவர்கள் தெரிவித்துள்ளாா்.
மேலும் மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றும், இந்த கல்வியாண்டில் விண்ணப்பப் பதிவு, சமர்ப்பிப்பு, சான்றிதழ் சரிபாா்ப்பு, தரவரிசை, கலந்தாய்வு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் இணைய வழியாக மட்டுமே நடைபெறும் எனவும், இது தொடர்பாக கூடுதல் விபரங்களுக்கு 0422-2590080, 94869- 77757 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.