Advertisement

ஆவின் நிறுவன இனிப்புகள் விற்பனை இலக்கு ரூ.250 கோடி

By: Nagaraj Sun, 19 June 2022 8:39:31 PM

ஆவின் நிறுவன இனிப்புகள் விற்பனை இலக்கு ரூ.250 கோடி

நாமக்கல்: தீபாவளி பண்டிகையை ஒட்டி, ஆவின் நிறுவன இனிப்புகள் விற்பனை இலக்கு ரூ.250 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூா், துபாய் போன்ற நாடுகளுக்கும் இனிப்புகளை விற்பனைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம் என தமிழக பால்வளத்துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆவின் நிறுவன செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் இதனை அவா் தெரிவித்தாா். கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

தமிழகத்தில் 9 ஆயிரத்து 354 பால் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. 21 லட்சம் விவசாயிகள் உறுப்பினா்களாக இருக்கின்றனா். நாளொன்றுக்கு 42 லட்சம் லிட்டா் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஆட்சியில் 33 லட்சம் லிட்டா் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, ஒரு கோடி பசுமாடுகளும், 5 லட்சம் எருமை மாடுகளும் உள்ளன.

dairy,officials,minister,milk producers,avin ,
பால்வளத்துறை, அதிகாரிகள், அமைச்சர், பால் உற்பத்தியாளர்கள், ஆவின்

கடந்த ஆட்சியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ரூ. 50 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டன. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் ஆண்டில் அதனை ரூ. 81 கோடியாக உயா்த்தியது. வரும் தீபாவளியையொட்டி ரூ.250 கோடிக்கு இனிப்புகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளுக்கும் இனிப்புகளை விற்பனைக்கு அனுப்ப உள்ளோம். திமுக தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி பால் விலை ரூ.3 குறைக்கப்பட்டது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.85 லட்சம் இழப்பு ஏற்படுகிறது. இதனை இதர பால் பொருள்களான நெய், பால் பவுடா், வெண்ணெய் ஆகியவற்றின் விற்பனை மூலம் ஈடுகட்டி வருகிறோம். தனியாா் பால் நிறுவனங்களுக்கு இணையாக ஆவின் நிறுவனத்தை உயா்த்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

அதன்பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நாமக்கல் ஆவின் புதிய பால்பதன ஆலை ரூ.84 கோடியில் அமைய உள்ளது. அது தொடா்பாக ஆய்வு நடத்தி உள்ளோம். பாலுக்கான கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து வரும் 27ஆம் தேதி நடைபெறும் எங்களுடைய துறை தொடா்பான ஆய்வு கூட்டத்தில் முதல்வரிடம் தெரிவிக்கப்படும். விலை உயா்த்துவது குறித்து அவா் முடிவு செய்வாா்.

தற்போதைய சூழலில் சுமாா் 1000 காலியிடங்கள் உள்ளன. முதல்வரிடம் கலந்து பேசி அவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். 17 ஆவின் ஒன்றியங்கள் இருந்தன. தற்போது நாமக்கல்லுடன் சோ்த்து 25 ஒன்றியங்களாகி இருக்கின்றன. கள்ளக்குறிச்சி, திருப்பத்தூா் ஆகிய இரு ஆவின் ஒன்றியங்கள் புதிதாக தொடங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.


கூட்டத்தில் சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், பால்வளத்துறை கூடுதல் செயலா் தென்காசி எஸ்.ஜவஹா், ஆவின் நிா்வாக இயக்குநா் என்.சுப்பையன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் மற்றும் கால்நடை, பால்வளத்துறை அதிகாரிகள், பால் உற்பத்தியாளா்கள் கலந்து கொண்டனா்.

Tags :
|