உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு..
By: Monisha Thu, 07 July 2022 8:59:07 PM
தமிழ்நாடு: இன்றைய கால கட்டத்தில் உணவு முறையால் நிறைய பதிப்பு வருகிறது. உணவே மருந்து காலம் சென்று உணவு நஞ்சு என்று நிலைமை வந்து உள்ளது.. அது குறித்து சுகாதார அமைச்சர் விழிப்புணர்வு.
தருமபுரி மாவட்டத்தில் அனைத்து உணவு வணிகர்களும் 100 சதவீதம் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் பெற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், சிறப்பு முகாம்கள் நடத்த மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து மாரண்டஅள்ளி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் இன்று உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் பெற சிறப்பு முகாம் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர். ஏ .பானு சுஜாதா தலைமையில் நடந்தது.
இந்த முகாமில் மாரண்டஅள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வணிகர்கள் கலந்துகொண்டு உணவுபாதுகாப்பு உரிமம் பெற விண்ணப்பம் வழங்கினர். இதனை தொடர்ந்து உணவு பாதுப்பு அலுவலர் சுஜாதா பேசும் போது; பொதுமக்களுக்கு வழங்கும் உணவுகளை பாதுகாப்பாக வழங்க வேண்டும். சில்லிசிக்கன் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு கலர் பவுடர்களை சேர்த்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணையை மீண்டும் பயன்படுத்தகூடாது. உணவு பாக்கெட்டுகளில் சரியான முத்திரை இருக்க வேண்டும். உணவு பொருட்கள் விற்பனை செய்ய உரிய அனுமதிபெற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.