Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலக தண்ணீர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு காணொளி

உலக தண்ணீர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு காணொளி

By: vaithegi Wed, 22 Mar 2023 09:56:01 AM

உலக தண்ணீர் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு காணொளி

சென்னை: உலக தண்ணீர் தினம் இன்று ..... இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில், “உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ, அதை அளவிற்கு முக்கியமானது தண்ணீர். இப்போது உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படையானது தண்ணீர். உலகம் எந்த அளவிற்கு உயர்ந்தாலும், மாறினாலும், மாறுதலை அடைந்தாலும் தண்ணீரின் தேவை என்பது மாறாதது.

அதனால்தான் ‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் ஐயன் வள்ளுவன். தமிழ் நிலமானது தண்ணீரை தனது பண்பாடுடன் சேர்த்து வளர்த்து வந்துள்ளது. தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் ‘நிலம் நீர் வழி வசம்போடு- ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்’ என்கிறது. தண்ணீர் என சொல்லாமல் ‘அமுதம்’ என்றவர் திருவள்ளுவர். மேலும் மனித உடலில் தண்ணீரின் அளவு குறைந்தாலும் கூடினாலும் தீமை ஏற்படும் என்கிற மருத்துவ புலமையோடு ‘மிகவும் குறையினும் நோய் செய்யும்’ என்றார் வள்ளுவர்.

chief minister,awareness,water ,முதலமைச்சர் ,விழிப்புணர்வு ,தண்ணீர்


இதனை அடுத்து திருமந்திரமும், தேவாரமும், திருவாசகமும் தண்ணீரின் அவசியத்தை அழகு தமிழில் சொல்கிறது. நீர்நிலைகளின் அளவைப் பொறுத்து பெயர் வைத்தவர் தமிழர். குட்டை, குளம், ஊரணி, ஏரி, ஏந்தல், கண்மாய், ஆறு, நீரோடை, கடல் என பிரித்து பெயர் சூட்டினர். எல்லாமே நீர் உள்ள இடம்தான்; ஆனாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையின் அளவு கொண்டது. கடல் நீரை உன் நீர் எனவும் , ஆற்று நீரை நன்னீர் எனவும், குடிநீரை இன்னீர் எனவும், குளிர்ந்த நீரை தண்ணீர் எனவும் நீரில் தன்மைக்கு ஏற்ப பெயர் சூட்டிய இனம் தமிழ் இனம். உடம்பை குளிர்வித்தலை குளித்தல் ஆகும். தாயைப் படித்தாலும் தண்ணீரை பலிக்காதே என்பதுதான் தமிழின் பழமொழி.

நம் உடலின் அனைத்து செயல்பாடுகளும் முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் மிக மிக அவசியம். உணவு இன்றி கூட மனிதனால் பல நாட்கள் இருக்க முடியும்; ஆனால் நீரின்றி இருக்க முடியாது. மேலும் இத்தகைய உயிர்நாடியான தண்ணீரை நாம் காக்க வேண்டும். அதாவது நம்மை காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும். நீரை வீணாக்கக்கூடாது; பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தூய்மையாக வைத்திருக்க வேண்டும்; நீர் நிலைகளை மாசுபடாமல் காக்க வேண்டும்; தூர்வாரி வைத்திருக்க வேண்டும்; இன்றைக்கு ஒரு நாட்டின் பலம் என்பது நீர் வளமாக, இயற்கை வளமாக கணக்கிடப்படும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். புவி வெப்பமயமாகி கொண்டு வருகிறது, இதிலிருந்து நம்மை காப்பது தண்ணீர் மட்டும் தான். எனவே நீர் இல்லையேல் உயிர் இல்லை என்பதை அனைவரும் உணர்வீர்கள். தண்ணீரை காப்போம்; தாய் நிலத்தை காப்போம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :