Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆயுதபூஜை, தீபாவளி.. தரமான, சுவையான இனிப்பு வகைகளைத் தயாரித்து விற்பனை செய்ய ஆவின் திட்டம்

ஆயுதபூஜை, தீபாவளி.. தரமான, சுவையான இனிப்பு வகைகளைத் தயாரித்து விற்பனை செய்ய ஆவின் திட்டம்

By: vaithegi Wed, 13 Sept 2023 1:36:25 PM

ஆயுதபூஜை, தீபாவளி..  தரமான, சுவையான இனிப்பு வகைகளைத் தயாரித்து விற்பனை செய்ய ஆவின் திட்டம்

சென்னை: தமிழகத்தில் ஆவின் நிறுவனம் வாயிலாக, தினமும் 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.இந்த பாலைப் பதப்படுத்தி, ஆரஞ்சு, பச்சை, நீலநிறப் பாக்கெட்களில் அடைத்து ஆவின் விற்பனைசெய்கிறது. மேலும் இதுதவிர, வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உட்பட 225 வகையான பால் பொருட்களைத் தமிழகம் முழுவதும் உள்ள27 ஒன்றியங்கள் வாயிலாக, தயாரித்து, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்கிறது.

இந்த நிலையில், நிகழாண்டில் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் சிறப்பு இனிப்புவகைகள், கார வகைகளை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.இத்தியாய்டுது இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு பண்டிகைக் காலங்களில், நெய் பாதுஷா, நட்ஸ்ஹல்வா, காஜூ பிஸ்தா ரோல், நெய்அல்வா, கருப்பட்டி அல்வா, மிக்ஸர்உள்ளிட்டவற்றை தயாரித்து, தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள், பொதுமக்கள் கூடும் சந்தைகள், சாலை சந்திப்புகள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் விற்பனை செய்யப்பட்டன.

aavin,ayuthapuja,diwali ,ஆவின் ,ஆயுதபூஜை, தீபாவளி


எனவே இதன்மூலமாக, ரூ.116 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. கடந்த ஆண்டு விற்பனை 40 சதவீதம் அதிகரித்தது. இதேபோன்று, இந்தாண்டும் இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.இந்தாண்டு பண்டிகை நெருங்கும் நிலையில், இனிப்பு, காரவகைகளை மொத்தமாக கொள்முதல் செய்ய சென்னையில் உள்ளதகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட பல தனியார் நிறுவனங்கள் எங்களை தற்போது அணுகி வருகின்றன.

மேலும் புதிய வகை இனிப்புவகைகளைத் தயாரித்து வழங்குவது தொடர்பாக எதுவும் முடிவு செய்யவில்லை. அதேநேரத்தில், கடந்தாண்டு பண்டிகைக் காலத்தில் மக்கள் அதிகம் விரும்பி வாங்கிய இனிப்பு வகைகள் உற்பத்தி அளவை உயர்த்தவும், ஏற்கெனவே வழங்கும் இனிப்பு, கார வகைகள் தரத்தில் அதிக கவனம் செலுத்தவும் ஆலோசனை வழங்கிவுள்ளோம் என அவர்கள் கூறினார்.




Tags :
|