Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மீண்டும் 4 மாவட்ட முழு ஊரடங்கு; 2 தினங்கள் மட்டும்தான் வங்கிகள் செயல்படும்

மீண்டும் 4 மாவட்ட முழு ஊரடங்கு; 2 தினங்கள் மட்டும்தான் வங்கிகள் செயல்படும்

By: Nagaraj Mon, 15 June 2020 9:15:57 PM

மீண்டும் 4 மாவட்ட முழு ஊரடங்கு; 2 தினங்கள் மட்டும்தான் வங்கிகள் செயல்படும்

வங்கிகள் 2 நாட்கள் மட்டுமே செயல்படும்... சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் நிலையில் வங்கிகள் ஜூன் 29, 30 ஆகிய இரு தினங்கள் மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் , சென்னை மற்றும் ஒட்டியுள்ள மாவட்டங்களின் பகுதிகளில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி இரவு 12 மணி வரை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

2 days,banks,operating,government,reporting ,2 நாட்கள், வங்கிகள், செயல்படும், அரசு, அறிக்கை

இந்த கால கட்டத்தில் வங்கிகள் ஜூன் 29, 30 ஆகிய இரு தினங்கள் மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் 33 சதவீத பணியாளர்களோடு 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் அது சம்மந்தப்பட்ட வங்கிப்பணி மற்றும் போக்குவரத்து வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
|
|