Advertisement

பக்ரீத் பிரியாணி ரெடி..கலைக்கட்டும் ஆட்டு சந்தை..

By: Monisha Thu, 07 July 2022 9:14:04 PM

பக்ரீத் பிரியாணி ரெடி..கலைக்கட்டும் ஆட்டு சந்தை..

தமிழ்நாடு: திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது. வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூரில் வாரம்தோறும் வியாழக்கிழமையன்று ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறும்.

இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இஸ்லாமியர்கள் பக்ரீத் நாளில் குர்பானி கொடுப்பதற்காக அதிக அளவில் ஆடுகளை வாங்குவது வழக்கம். இதையொட்டி அய்யலூரில் கூடிய ஆட்டுச் சந்தை கலை கட்டியது.

அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் சந்தையில் குவிந்தனர். இதனால் சந்தையில் கூட்டம் அலை மோதியது. வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளையும் சேவல்களையும் வாங்கி வண்டிகளில் ஏற்றிச் சென்றனர்.

briyani,bakrit,goat,sales ,திண்டுக்கல்,புகழ்பெற்ற, சந்தை,பக்ரீத்,

இது குறித்து வியாபாரிகள் கூறியபோது இன்று ஆட்டுச் சந்தையில் விற்பனை நல்ல முறையில் இருந்தது. சுமார் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

ஆடுகள் விற்பனைக்கு வந்த விவசாயிகள் கூறியபோது பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சந்தையில் தங்கள் கால்நடைகளுக்கு நல்ல விலை கிடைத்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags :
|
|