Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 4வது நாளாக நீட்டிப்பு

குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 4வது நாளாக நீட்டிப்பு

By: vaithegi Thu, 04 Aug 2022 09:19:26 AM

குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 4வது நாளாக நீட்டிப்பு

தென்காசி : தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.. இந்நிலையில் கடந்த 3 நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது.

எனவே அதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி போன்ற அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்று 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

kurdalam,to bathe,ban ,குற்றாலம்,குளிக்க ,தடை

இதனால் இதன் காரணமாக கூட்டம் மிகவும் குறைந்துள்ளது. இந்நிலையில் குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 4வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.இதனால் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

Tags :