Advertisement

பெட்ரோல், டீசலை கேன்களில் வாங்க தடை

By: vaithegi Sat, 24 Sept 2022 5:59:39 PM

பெட்ரோல், டீசலை கேன்களில் வாங்க தடை

சென்னை: தமிழகத்தில் குற்ற நிகழ்வுகள் ஏதும் நடந்து விடாமல் இருக்கவும், அதற்கான சூழ்நிலைகளை முன்கூட்டியே தடுக்கவும் காவல் துறை நடவடிக்கை எடுத்து கொண்டு வருகிறது. இதனை அடுத்து தமிழக தலைமை கூடுதல் காவல்துறை அதிகாரியான சைலேந்திர பாபு அவர்கள் பதவியேற்றது முதல், இதற்கான நடவடிக்கைகள் அதிரடியாக நடந்து வருகிறது.

மேலும், காவல் துறையினரும் முறைகேடுகளில் ஈடுபடுவது தெரிய வந்தது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

petrol,diesel ,பெட்ரோல், டீசல்

இதனால், காவல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகள் தடுக்கப்படும் என்று காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோநிறு பொதுமக்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் திருவாரூர் மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் அவர்கள் முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எனவே அதன்படி, இனி திருவாரூரில் பெட்ரோல், டீசலை கேன்களில் கொடுக்க கூடாது என பெட்ரோல் பங்குகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல், டீசலை பாட்டில்களில் கொண்டு வருகிறார்களா? என்று காவல் துறையினர் சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
|