3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு
By: vaithegi Tue, 31 Jan 2023 8:52:02 PM
சென்னை: ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பார்ப்பதற்கும் தடை .... ஜி 20 கல்வி செயற்குழு மாநாடு இன்று முதல் 2-ம் தேதி வரை 3 நாட்கள் மகாபலிபுரத்தில் நடைபெறுகிறது இதில் 29 வெளிநாடு பிரதிநிதிகள், 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர.
இதையடுத்து இவர்களுக்காக சென்னை தாஜ் கோரமண்டல் , தாஜ் கன்னிமாரா, ஹையாத் , தாஜ் கிளப் ஹவுஸ் போன்ற நட்சத்திர விடுதிகளில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் அத்துடன் மகாபலிபுரத்தில் உள்ள யுனெஸ்கோ வேர்ல்ட் ஹெரிடேஜ் சைட்ஸ்ல் நடைபெறும் நிகழ்விலும் ஜி20 மாநாட்டிற்கு வரும் அனைத்து பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.
எனவே இன்று முதல் 2ம் தேதி வரை சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேற்கூறிய தங்குமிடங்கள், விழா நடைபெறும் இடங்கள் போன்றவை முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழித்தடங்கள் என்பதால் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அத்துடன் அந்த பகுதிகள் மற்றும் வழித்தடங்களில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பார்ப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.