Advertisement

திருவாரூர், நாகையில் ட்ரோன்கள் பறக்க தடை

By: vaithegi Thu, 24 Aug 2023 09:57:08 AM

திருவாரூர், நாகையில் ட்ரோன்கள் பறக்க தடை

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுர கல்லூரி பவள விழாவில் கலந்துகொண்டு நாளை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரான நாகை மாவட்டம் திருக்குவளையில் பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
மேலும் அத்துடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் பங்கேற்கிறார். இதை தொடர்ந்து வருகிற 26 ஆம் தேதி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு திருவாரூர் செல்லும் அவர்,

drones,chief minister m.k.stalin ,ட்ரோன்கள் ,முதல்வர் மு.க.ஸ்டாலின்

வருகிற 27 ஆம் தேதி நாகை கம்யூனிஸ்ட் கட்சி எம்பி செல்வராஜ் மகள் திருமணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதன் பின்னர் மதியம் திருச்சியிலிருந்து விமானம் மூலமாக சென்னை வருகிறார். முதல்வரின் 4 நாள் வருகை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் திருவாரூர், நாகைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி திருச்சியில் இரு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக முதல்வர் செல்லவுள்ளதால், ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மற்றும் ஆகஸ்ட் 27ஆம் தேதிகளில் தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் அறிவித்து உள்ளார்.

Tags :
|