பிளாஸ்டிக் பொருள்களுக்கு இன்று முதல் தடை .. அமலுக்கு வந்தது..
By: Monisha Fri, 01 July 2022 10:07:53 PM
தமிழ்நாடு: இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து உள்ளனர் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தி பொருட்களுக்கு தடை விதித்து உள்ளனர்.
ஜூலை 1ம் தேதி முதல் அனைத்து விதமான ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி, இறக்குமதி, விநியோகம், விற்பனை மற்றும் விற்பனைக்கு இன்று முதல் தடை அமலுக்கு வருகிறது.
இதனை அடுத்து ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வந்த வணிகர்கள் அதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
குறிப்பாக குளிர்பானங்களுக்கு வழங்கபட்டு வந்த பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு பதிலாக காகித ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :
plastic |
ban |
effect |