Advertisement

மதுரையில் வருகிற மே 5-ம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை

By: vaithegi Wed, 03 May 2023 11:23:31 AM

மதுரையில் வருகிற மே 5-ம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை

மதுரை: தமிழகத்தில் சித்திரை மாதம் தொடங்கிவிட்டால் மதுரை மாவட்டத்தில் திருவிழாவிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா ஒரு பக்கம் இருக்கும் நிலையில் மறுபக்கம் மே 5-ம் தேதி புத்தர் ஜெயந்தி வருகிறது.

எனவே அதன் காரணமாக மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இறைச்சி கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டு அரசு ஆணை வெளியிட்டு உள்ளது.

meat,madurai,sale ,இறைச்சி ,மதுரை,விற்பனை

மேலும் மே 5-ம் தேதி ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்றவற்றின் இறைச்சி விற்பனை செய்யப்படும் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த கடைகளை திறக்கவும் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த உத்தரவை மீறுவோரின் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அரசு ஆணையின் படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|