Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின்சார பற்றாக்குறை .. பள்ளி, கல்லூரிகளை வாரம் 5 நாட்கள் மட்டும் இயக்க வங்காளதேசம் முடிவு

மின்சார பற்றாக்குறை .. பள்ளி, கல்லூரிகளை வாரம் 5 நாட்கள் மட்டும் இயக்க வங்காளதேசம் முடிவு

By: vaithegi Tue, 23 Aug 2022 08:56:19 AM

மின்சார பற்றாக்குறை  ..   பள்ளி, கல்லூரிகளை வாரம் 5 நாட்கள் மட்டும் இயக்க வங்காளதேசம் முடிவு

வங்காளதேசம் : உலகின் பல்வேறு நாடுகளை போல வங்காளதேசமும் தற்போது மின்சார பற்றாக்குறையால் திணறி கொண்டு வருகிறது. இந்த நிலையில் மின்சாரத்தை மிச்சப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு எடுத்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, பள்ளி, கல்லூரிகளை வாரம் 5 நாட்கள் மட்டும் இயங்க செய்யவும், சனி, ஞாயிறு என 2 நாட்கள் விடுமுறை விடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடந்த மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

school,college,electricity shortage,bangladesh , பள்ளி, கல்லூரி,மின்சார பற்றாக்குறை,வங்காளதேசம்

இந்த கூட்டத்துக்குப் பின் இம்முடிவை மந்திரிசபை செயலாளர் கண்டாகேர் அன்வருல் இஸ்லாம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எப்போதில் இருந்து இந்த முடிவை நடைமுறைக்கு கொண்டுவருவது என கல்வி அமைச்சகம் தீர்மானிக்கும் என்றார் அவர்.

மேலும், 24-ந்தேதி (நாளை) முதல் அனைத்து அரசு, தன்னாட்சி அலுவலகங்களும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செயல்படும். வங்கிகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும். மின்சார பயன்பாட்டை குறைத்துக்கொள்ளும்படி அனைத்து அலுவலகங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றன என அன்வருல் இஸ்லாம் கூறினார்.

Tags :
|