Advertisement

நாளை முதல் இத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

By: vaithegi Fri, 21 Oct 2022 2:23:03 PM

நாளை  முதல் இத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

இந்தியா: இந்தியாவில் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகளும் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கியானது மாதந்தோறும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்களை அறிவித்து வருகிறது.

இந்த வங்கி விடுமுறை நாட்கள் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. அந்தந்த மாநில பண்டிகைகள் மற்றும் உள்ளூர் விடுமுறைகளை பொறுத்து மாறுபடுகிறது. தற்போது இந்தியாவில் தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இந்த பண்டிகையை வட மாநிலங்களில் திரயோதசி, கௌரி விரதம் என்று 5 நாட்கள் கொண்டாடுகின்றனர்.இந்த நிலையில் வங்கி விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது நாளை (21.10.2022) முதல் வங்கிகளுக்கு 6 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

holiday,bank ,விடுமுறை ,வங்கி

இதனை அடுத்து 22.10.2022 – 4 – வது சனிக்கிழமை விடுமுறை
23.10.2022 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
24.10.2022 – தீபாவளி (காங்டாக், ஹைதராபாத், இம்பால்) தவிர பிற பகுதிகள் முழுவதும் விடுமுறை

25.10.2022 – லக்ஷ்மி பூஜை காங்டாக், ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர் வங்கிகளுக்கு விடுமுறை
26.10.2022 – கோவர்தன் பூஜை, லக்ஷ்மி பூஜை அகமதாபாத், பேலாப்பூர், பெங்களூரு, டேராடூன், காங்டாக், ஜம்மு, கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், சிம்லா, ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை
27.10.2022 – சித்ரகுப்த் ஜெயந்தி, காங்டாக், இம்பால், கான்பூர், லக்னோ ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.

Tags :