Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முழு ஊரடங்கு அமலில் உள்ள மாவட்டங்களில் 2 நாட்கள் வங்கிகள் செயல்பட அனுமதி

முழு ஊரடங்கு அமலில் உள்ள மாவட்டங்களில் 2 நாட்கள் வங்கிகள் செயல்பட அனுமதி

By: Monisha Mon, 29 June 2020 09:45:44 AM

முழு ஊரடங்கு அமலில் உள்ள மாவட்டங்களில் 2 நாட்கள் வங்கிகள் செயல்பட அனுமதி

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 19-ந்தேதி முதல் 30-ந்தேதி (நாளை) வரை 12 நாட்கள் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காலக்கட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து வேறு எந்த பணிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் வங்கி சேவைக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

full curfew,bank,chennai,kanchipuram,chengalpattu,tiruvallur ,முழு ஊரடங்கு,வங்கி,சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர்

இந்த நிலையில் 33 சதவீத பணியாளர்களோடு 29-ந்தேதி (இன்று) மற்றும் 30-ந்தேதி (நாளை) ஆகிய நாட்களில் மட்டும் வங்கிகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. இதன்படி இன்றும், நாளையும் வங்கிகள் குறைவான பணியாளர்களோடு செயல்பட உள்ளன.

10 நாட்களுக்கு பின்னர் வங்கிகள் திறக்கப்பட உள்ளதால், பல்வேறு பரிவர்த்தணைகளுக்காக பொதுமக்கள் படையெடுப்பார்கள் என்று தெரிகிறது. இதை எதிர்கொள்ள வங்கி நிர்வாகங்களும் தயாராகி வருகின்றன. வங்கிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க மக்கள் அறிவுறுத்தபடுகின்றனர்.

Tags :
|