Advertisement

இந்த நாட்கள் வங்கிகள் செயல்படாது

By: vaithegi Wed, 25 Jan 2023 3:38:05 PM

இந்த நாட்கள் வங்கிகள் செயல்படாது

சென்னை: நாளை முதல் 5 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வருகிற 30-ஆம் தேதி திங்கள்கிழமை மற்றும் 31-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளது.

எனவே அன்றைய தினங்களில் தமிழக முற்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து பொது வங்கிகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் அத்துடன் குடியரசு தினத்தை முன்னிட்டு வங்கிகளுக்கு நாளை அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.

banks,government holidays ,வங்கிகள் , அரசு விடுமுறை

இதனை அடுத்து வரும் சனிக்கிழமை நான்காவது சனிக்கிழமை என்பதாலும், அன்றைய தினமும் மறுநாள் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை நாளாகும்.

இதற்கு இடையில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் வங்கிகள் செயல்படும். வங்கிகள் ஐந்து நாட்கள் செயல்படாததால் வங்கி சேவைகள் மிக கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Tags :
|