Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு..இன்று 3-வது நாளாக அருவிகளில் குளிக்க தடை

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு..இன்று 3-வது நாளாக அருவிகளில் குளிக்க தடை

By: vaithegi Wed, 03 Aug 2022 10:20:14 AM

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு..இன்று 3-வது நாளாக அருவிகளில்   குளிக்க தடை

தென்காசி: கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து கொண்டு வருகிறது. மலை பகுதியில் கடந்த 3 நாட்களாகவே பெய்யும் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

எனவே அதனால் இன்று 3-வது நாளாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. குற்றாலம் மெயினருவியில் ஆர்ச்சை தாண்டியபடி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி தீர்த்து வருகிறது. மேலும் ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அந்த பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

courtalam,flooding,bathing prohibited ,குற்றாலம் ,வெள்ளப்பெருக்கு,குளிக்க தடை

இதை அடுத்து இன்னும் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் நேற்றும் பலத்த மழை பெய்தது. குறிப்பாக குண்டாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை கொட்டி வருகிறது.

மேலும் நெல்லை மாவட்டத்தில் நேற்று மழை குறைந்தது. ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. எனினும் அணை பகுதியில் பெய்த மழையின் காரணமாக தண்ணீர் வரத்து இருந்தது. 143 அடி கொண்ட பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 3,399 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 5 அடி உயர்ந்து 75.30 அடியானது. இதேபோல் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் இன்று 100 அடியை கடந்தது. இன்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 100.56 அடியாக உள்ளது.

Tags :