Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென்காசி, குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு... குளிக்க தடை

தென்காசி, குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு... குளிக்க தடை

By: vaithegi Tue, 02 Aug 2022 08:23:22 AM

தென்காசி, குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு...  குளிக்க தடை

தென்காசி: குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையினால் குற்றாலம் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்துள்ளது.

ban on bathing,flooding,swimming pools , குளிக்க தடை ,வெள்ளப்பெருக்கு,குற்றாலம்

எனவே வெள்ளப்பெருக்கின்போது குளிப்பது ஆபத்து என்பதால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

இதை அடுத்து இந்த வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags :