Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாங்கள் ஆட்சிக்கு வரும் முன் சரியான மின்சார வசதி இல்லாமல் இருந்தது - நிதிஷ்குமார்

நாங்கள் ஆட்சிக்கு வரும் முன் சரியான மின்சார வசதி இல்லாமல் இருந்தது - நிதிஷ்குமார்

By: Karunakaran Sat, 24 Oct 2020 10:29:46 PM

நாங்கள் ஆட்சிக்கு வரும் முன் சரியான மின்சார வசதி இல்லாமல் இருந்தது - நிதிஷ்குமார்

பீகார் சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல்மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா இணைந்த கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. இந்த கூட்டணியை எதிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி இணைந்த மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

ஆளும் என்டிஏ கூட்டணியில் இருந்து பிரிந்த லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிடுகிறது. ஆனாலும் பாஜகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கிறது. 2005-ம் ஆண்டு முதல் பீகார் முதல்மந்திரியாக உள்ள நிதிஷ்குமார் 4-வது முறையாக முதல்மந்திரியாகிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

bihar,electricity facility,nitish kumar,campaign ,பிஹார், மின்சார வசதி, நிதீஷ் குமார், பிரச்சாரம்

இந்நிலையில், அம்மாநிலத்தின் வைஷாலி நகரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் பேசுகையில், கிராமங்களை மறந்து விடுங்கள், நாங்கள் ஆட்சிக்கு வரும் முன் நகரங்களில் கூட சரியான மின்சார வசதி இல்லை. நாங்கள் மின்வசதியை மேம்படுத்தினோம். அனைத்து வீடுகளுக்கு மின் இணைப்பை கொடுக்க வேண்டும் என முடிவு செய்தோம். அதற்காக 2018 டிசம்பர் மாதத்தை இலக்காக நிர்ணயித்தோம். ஆனால், 2018 நவம்பர் மாதத்திற்குள்ளேயே பீகாரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பை வழங்கி விட்டோம் என்று கூறினார்.

மேலும் அவர், கடந்த 15 ஆண்டுகளாக வேலை செய்ய மக்களுக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இதனால் மின்சார நுகர்வின் அளவு தெரியுமா? 700 மெகாவாட்டில் இருந்து தற்போது 6 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்ந்துள்ளது. மின் இணைப்பு அனைத்து வீடுகளையும் சென்றடைந்துள்ளது. நாம் இந்த பீகாரை உருவாக்கியுள்ளோம் என பேசினார்.

Tags :
|