- வீடு›
- செய்திகள்›
- அமேசான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக வெளியான செய்திக்கு பாரதி ஏர்டெல் விளக்கம்
அமேசான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக வெளியான செய்திக்கு பாரதி ஏர்டெல் விளக்கம்
By: Karunakaran Fri, 05 June 2020 8:30:09 PM
ஏர்டெல் நிறுவனத்தில் ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகளை அமேசான் நிறுவனம் வாங்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக நேற்று செய்திகள் வெளியாகின. இந்த செய்திக்கு பாரதி ஏர்டெல் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து பாரதி ஏர்டெல் நிறுவனம் விளக்கமளிகையில், நேற்று வெளியான செய்தியில் துளியும் உண்மையில்லை எனவும், இதுவரை அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், இரு நிறுவனங்களிடையே ஒப்பந்தம் இறுதியானால், ஏர்டெல் நிறுவனத்தின் ஐந்து சதவீத பங்குகளை அமேசான் வாங்கும். இதனால், ஏர்டெல் நிறுவன பங்குகள் ஆறு சதவீதம் வரை உயரும்.
இருப்பினும் இதுபோன்ற செய்திகள் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தும். இது நிறுவனத்தின் நன்மதிப்பை பாதிக்கும் என பாரதி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.