அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை ஏற்பாடுகள் மும்முரம்
By: Nagaraj Sun, 02 Aug 2020 12:25:30 PM
அயோத்தியில் வரும் அஞ்சாம் தேதி நடக்க உள்ள ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
அயோத்தியில் நடக்கும் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பாஜ மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரையும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதி அளித்தது.
கோவில் கட்டுவதற்காக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்தயாத்ரா அறக்கட்டளை
என்பதை மத்திய அரசு இந்நிலையில் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில்
கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 5ஆம் தேதி காலை நடைபெறுகிறது.
இதில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். விழா ஏற்பாடுகள் பற்றி அறக்கட்டளை தலைவர் கோபால்தாஸ் கூறியதாவது:
அடிக்கல்
நாட்டு விழாவிற்கான சடங்குகள் துவங்குகின்றன. இதற்காக வாரணாசியிலிருந்து
வேத விற்பன்னர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். கங்கை, யமுனை, காவிரி உட்பட
நாட்டின் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு
வரப்பட்டுள்ளன.
ராமேஸ்வரம், வாரணாசி உட்பட பல இடங்களில் இருந்து
கொண்டு வரப்பட்டுள்ளது. இவை அடிக்கல் நாட்டு விழாவில் பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விழாவில் பிரதமர் மோடி, முதல்வர்
ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் பல்வேறு மாநில
முதல்வர்கள் என 200 விஐபிகள் விழாவில் பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை
பார்வையிட ஆதித்யநாத் இன்று அயோத்திக்கு வருகை தருகிறார். அடிக்கல் நாட்டு
விழாவில் உத்திரபிரதேசம் மாநிலம் முழுவதும் சிறப்பு பூஜைகள்
நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் நாலாம் தேதி மற்றும் அஞ்சாம் தேதி உத்தர பிரதேச மாநிலம் முழுவதும்
தீபாவளி கொண்டாட்டம் போல் காட்சியளிக்கும். அடிக்கல் நாட்டு விழாவில்
சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை
எச்சரிக்கை விடுத்துள்ளது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.