Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அசாமின் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பெரிய வெடி விபத்து; வெளிநாட்டு நிபுணர்கள் 3 பேர் காயம்

அசாமின் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பெரிய வெடி விபத்து; வெளிநாட்டு நிபுணர்கள் 3 பேர் காயம்

By: Nagaraj Wed, 22 July 2020 9:38:49 PM

அசாமின் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பெரிய வெடி விபத்து; வெளிநாட்டு நிபுணர்கள் 3 பேர் காயம்

ஆயில் நிறுவனத்தில் பெரிய தீவிபத்து... அசாமின் டின்சுகியா மாவட்டத்தில் உள்ள ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பஜ்ஜன் கிணறு அருகே இன்று ஒரு பெரிய விபத்து நிகழ்ந்தது. ஏற்கனவே ஒரு மாதத்திற்கும் மேலாக கிணறு தீப்பிடித்து எரிந்து வரும் நிலையில் இந்த விபத்தில் மூன்று வெளிநாட்டு நிபுணர்கள் காயமடைந்தனர்.

நிபுணர்கள் திப்ருகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஆயில் இந்தியா லிமிடெட் பொது மேலாளர் ஜெயனாதா போர்முடோய் தெரிவித்தார். காயமடைந்த வல்லுநர்கள் அந்தோணி ஸ்டீவன் ரெனால்ட்ஸ், டக் டல்லாஸ் மற்றும் கிரேக் நீல் டங்கன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

assam,oil india company,staff injury,explosion ,அசாம், ஆயில் இந்தியா நிறுவனம், ஊழியர்கள் படுகாயம், வெடி விபத்து

கிணற்றின் ஸ்பூலைத் திறக்க வல்லுநர்கள் சென்று கொண்டிருந்த போது இந்த வெடித்தல் சம்பவம் ஏற்பட்டது. இந்த கிணறு மே 28 முதல் எரிவாயுவை வெளியேற்றி வருகிறது. ஜூன் 9 முதல் இப்பகுதியில் தீ பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இதில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிர் இழந்தனர்.

வெடி வெடிப்புக்குப் பின்னர் தொழிற்சாலைப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குண்டு வெடிப்புக்கான காரணம், அதன் அளவு மற்றும் தன்மை கண்டறியப்பட்டு வருவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Tags :
|