Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கும்பகோணத்தில் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கும்பகோணத்தில் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Sat, 30 Sept 2023 3:14:36 PM

கும்பகோணத்தில் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்


கும்பகோணம் : 100+ நிறுவனம் பங்கேற்பு ...கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு கொண்டு வருகிறது. அந்த வகையில், வருகிற அக்டோபர் 7 ஆம் தேதி கும்பகோணம் மாவட்டத்தில் உள்ள சாஸ்திரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, 10 -ஆம் வகுப்பு, 12- ஆம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என்று அனைத்து கல்வித்தகுதி பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

employment camp,kumbakonam ,வேலைவாய்ப்பு முகாம் ,கும்பகோணம்

இந்த வேலைவாய்ப்பு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொள்ள இருப்பதால் கட்டாயமாக இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், இது மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்கான பதிவு மற்றும் ஆலோசனை இலவசமாகவே வழங்கப்படும் என்று அறிவிக்கபட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் ஆதார் கார்டு, பான் கார்டு, கல்வி சான்றிதழ்கள் போன்றவற்றை எடுத்து செல்லும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இவ்வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான விவரங்களை அறிய 04362 – 237037 என்கிற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

Tags :