Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பீகார் சட்டசபை தேர்தல்: முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்குப்பதிவு

பீகார் சட்டசபை தேர்தல்: முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்குப்பதிவு

By: Monisha Wed, 28 Oct 2020 08:10:30 AM

பீகார் சட்டசபை தேர்தல்: முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்குப்பதிவு

கொரோனா பரவலுக்கு மத்தியில் பீகார் சட்டசபை தேர்தல் இன்று நடைபெறுகிறது. முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

இந்த தேர்தலில் 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 80 வயது கடந்த மூத்த குடிமக்கள் அல்லது மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக தபால் ஓட்டு நடைமுறையும் உள்ளது. இதன்படி, 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க இருக்கின்றனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

bihar,assembly,election,voting,election commission ,பீகார்,சட்டசபை,தேர்தல்,வாக்குப்பதிவு,தேர்தல் ஆணையம்

வாக்குப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய அரசு 30 ஆயிரம் மத்திய பாதுகாப்பு படை வீரர்களை குவித்து உள்ளது. மாவோயிஸ்டுகள் அதிகமுள்ள தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான பல்வேறு விதிமுறைகளும் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளன. 7 லட்சம் சேனிடைசர்கள், 46 லட்சம் மாஸ்குகள், 6 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், 6.7 லட்சம் முக கவசங்கள், 23 லட்சம் ஜோடி கையுறைகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

Tags :
|
|