டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்களை முதன்முறையாக சந்திக்கிறார் பீகார் முதல்வர்
By: Nagaraj Sun, 04 Sept 2022 4:38:11 PM
பீகார்: வரும் 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல் மந்திரி நிதிஷ்குமார் நாளை மறுதினம் டெல்லி செல்கிறார். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த பயணத்தின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரையும் சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பில் நடாளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொள்வது
குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது. மேலும், டெல்லி முதல் மந்திரி
அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் இடதுசாரி தலைவர்களையும் நிதிஷ்குமார் சந்திக்க
உள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன.
பீகாரில்
பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட பிறகு நிதிஷ்குமார் டெல்லியில்
எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க இருப்பது இது முதல் முறை என்பது
குறிப்பிடத்தக்கது.