Advertisement

மதுபான கடைகளில் பில் போடும் இயந்திரம் .. விரைவில் அமல்

By: vaithegi Mon, 09 Oct 2023 1:32:23 PM

மதுபான கடைகளில் பில் போடும் இயந்திரம் .. விரைவில் அமல்

சென்னை: டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் வாங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு உரிய பில் போடும் நடைமுறை தொடங்கப்பட உள்ளது .. தமிழக மதுபான கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து கொண்டு வருகிறது.இதையடுத்து இது குறித்து கேட்ட போது அமைச்சரின் உத்தரவின் பேரிலேயே கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதாக சில மதுபான கடை ஊழியர்கள் கூறுகின்றனர்.

ஆனால் சில நேரங்களில் பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதால் மது பிரியர்கள் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி கொண்டு வருகிறது.

machine,bill,liquor store ,இயந்திரம் ,பில் ,மதுபான கடை


இதனை தடுக்கும் நோக்கில் தமிழக மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது மதுபான கடைகளில் பில் போடும் இயந்திரம் வினியோகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே இதன் வாயிலாக மதுப்பிரியர்கள் வாங்கும் பாட்டில்களுக்கு பில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இது தொடர்பான வேலை இன்னும் ஒரிரு மாதங்களில் முடிவடையும். அந்த பில்லில் இருப்பதை விட கூடுதல் விலைக்கும் மதுபானம் வாங்கினாலோ அல்லது விற்பனை செய்யப்பட்டாலோ தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|