Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமைச்சரை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவிப்பு

அமைச்சரை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவிப்பு

By: Nagaraj Sun, 11 June 2023 4:13:14 PM

அமைச்சரை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவிப்பு

கோவில்பட்டி: அமைச்சரை கண்டித்து போராட்டம்... பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிக்கு வந்தார் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி. அவருடன் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வருகை தந்தார்.

கோவில்பட்டியில் புதியதாக கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை திறந்து வைத்த கனிமொழியிடம், கோவில்பட்டி நகராட்சி 20வது வார்டு பா.ஜ.க கவுன்சிலர் விஜயகுமார், தனது வார்டில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்குமாறு கோரிக்கை வைத்தார். அது தொடர்பான மனு ஒன்றினையும் அளித்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட கனிமொழி ’நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார் . இருந்த போதிலும் விஜயகுமார் தொடர்ந்து தன்னுடைய பிரச்சினை குறித்து பேசி கொண்டு இருந்தார்.

bjp announcement,minister,condemnation,demonstration,apology ,பாஜக அறிவிப்பு, அமைச்சர், கண்டனம், ஆர்ப்பாட்டம், மன்னிப்பு

அப்போது தி.மு.க-வினர் போதும் போதும் என்று சொன்னாலும் விஜயகுமார் தொடர்ந்து வாதம் செய்து கொண்டிருந்தார். அதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதையெடுத்து காவல்துறையினர் விஜயகுமாரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும், விஜயகுமார் அசராமல் பேசிக்கொண்டு இருந்தார். இதனால் அருகில் இருந்த அமைச்சர் கீதா ஜீவனுக்கு கோபம் வந்தது. "தம்பி ஓவரா சீன் போடாதே. உங்கள் கோரிக்கையை சொல்லியாச்சுன்னா நாங்க பாத்துக்கிறோம்" என்று கூறினார். இது பா.ஜ.க-வினரை அவமானப்படுத்தும் செயல் போல ஆகிவிட்டது.

அமைச்சர் கீதா ஜீவன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரைக் கண்டித்து பாஜக போராட்டம் நடக்கும் என்று பா.ஜ.க கவுன்சிலர் விஜயகுமார் அறிவித்தார். இந்த நிலையில் நாளை 12ம் தேதி அமைச்சர் கீதா ஜீவனை கண்டித்து கோவில்பட்டி நகரில் பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

Tags :