Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இக்கட்டான நேரத்தில் கூட மக்களிடம் பிக் பாக்கெட் அடிக்க பாஜக ஆர்வமாக உள்ளது - பிரியங்கா காந்தி

இக்கட்டான நேரத்தில் கூட மக்களிடம் பிக் பாக்கெட் அடிக்க பாஜக ஆர்வமாக உள்ளது - பிரியங்கா காந்தி

By: Karunakaran Fri, 26 June 2020 12:58:57 PM

இக்கட்டான நேரத்தில் கூட மக்களிடம் பிக் பாக்கெட் அடிக்க பாஜக ஆர்வமாக உள்ளது - பிரியங்கா காந்தி

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கினால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். பலர் வேலையினை இழந்துள்ளனர். அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் கூட மக்கள் பணமிழந்து வாடி வருகின்றனர்.

இந்நிலையில் 80 நாட்களுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்வதால், மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் இந்த இக்கட்டான காலத்தில் விலை உயர்வு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

priyanka gandhi,bjp,big pocket,difficult time,increase in price ,பிக் பாக்கெட்,பாஜக, பிரியங்கா காந்தி,விலை உயர்வு

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில், தொடர்ந்து 19-வது நாளாக, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பாஜகவை கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த இக்கட்டான நேரத்தில் கூட மக்களிடம் ‘பிக் பாக்கெட்’ அடிப்பதில்தான் பா.ஜனதா அரசு ஆர்வமாக இருப்பது தெளிவாகி இருக்கிறது என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த கொள்ளையை மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags :
|