Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாஜகவினர் தங்கள் மீதான ஊழலை மறைக்க சிபிஐயை அனுப்பி மிரட்டுகின்றனர்

பாஜகவினர் தங்கள் மீதான ஊழலை மறைக்க சிபிஐயை அனுப்பி மிரட்டுகின்றனர்

By: Nagaraj Sun, 27 Aug 2023 10:41:59 PM

பாஜகவினர் தங்கள் மீதான ஊழலை மறைக்க சிபிஐயை அனுப்பி மிரட்டுகின்றனர்

திருவாரூர்: முதல்வர் பேச்சு... தமிழ்நாட்டை காப்பாற்றிவிட்டோம்; இனி இந்தியாவை காப்பாற்ற வேண்டிய சூழலுக்கு வந்துள்ளோம். பாஜகவினர் தங்கள் மீதான ஊழலை மறைக்கவே திமுக மீது அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித் துறையை விட்டு மிரட்டி பார்க்கின்றனர் என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

திருவாரூரில் நடைபெற்ற நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜின் மூத்த மகள் திருமணத்தில் பங்கேற்று பேசிய முதலமைச்சர், பனங்காட்டு நரியான திமுக, பாஜகவின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாது என்றார்.

scam,tiruvarur,wedding ceremony,chief minister,scam,bjp ,மோசடி, திருவாரூர், திருமண விழா, முதலமைச்சர், மோசடி, பாஜக

நாடு முழுவதும் உள்ள 600 சுங்கச்சாவடிகளில் 5 சுங்கச்சாவடிகளை மட்டும் சி.ஏ.ஜி ஆய்வு செய்துள்ளதாகவும் அதில் 137 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.

தமிழகத்திலுள்ள பரனூர் சுங்கச்சாவடியில் மட்டும் ஆறரை கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Tags :
|
|