Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாஜக பட்டியலின பிரிவு மாநில பொதுச்செயலாளர் திமுகவில் இணைந்தார்

பாஜக பட்டியலின பிரிவு மாநில பொதுச்செயலாளர் திமுகவில் இணைந்தார்

By: Nagaraj Tue, 07 Feb 2023 11:33:18 AM

பாஜக பட்டியலின பிரிவு மாநில பொதுச்செயலாளர் திமுகவில் இணைந்தார்

சென்னை: தமிழ்நாடு பாஜகவின் பட்டியலின பிரிவு மாநில பொதுச்செயலாளர் என்.விநாயகமூர்த்தி தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஈரோடு அதிமுக முக்கியப் புள்ளிகளை தட்டித் தூக்கி திமுகவில் இணைக்க செந்தில் பாலாஜி பல்வேறு வழிகளில் முயற்சித்து வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் பாஜகவின் மாநில நிர்வாகி திமுகவில் இணைந்திருப்பது கவனம் பெற்று வருகிறது.

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று தமிழ்நாடு பாஜகவின் பட்டியலின மாநில பொதுச்செயலாளர் என்.விநாயகமூர்த்தி தலைமையில் ஈரோடு மாவட்ட பா.ஜ.க. இளைஞர் அணிச் செயலாளர் வி.வெங்கடேஷ், மதுரைவீரன் மக்கள் இளைஞர் அணிச் செயலாளர் பழ.வீரக்குமார் ஆகியோர் பாஜகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

merger event,bjp,dmk joined,chief minister stalin ,இணைப்பு நிகழ்வு, பாஜ, திமுக, இணைந்தார், முதல்வர் ஸ்டாலின்

இது தொடர்பாக என்.விநாயகமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலின பிரிவு மாநிலப் பொதுச்செயலாளராக பணியாற்றி வநதேன். தற்போது, தமிழகத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்றுகிற தலைவராக, முதல்வர் பணியாற்றி வருகிறார்.

அவர் தலைமையின்கீழ் பணியாற்றவும் முடிவு செய்தேன். மதுரை வீரன் மக்கள் கட்சியை நடத்தி வருகிறேன். அதில் 3 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் உறுப்பினராக உள்ளார்கள். அவர்களையும் முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைத்து பணியாற்றுவதற்கும், இணைப்பு விழா நடத்துவதற்கும் ஏற்பாடு செய்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த இணைப்பு நிகழ்வில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை கே.செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags :
|