Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்த பிரியங்கா காந்தியை இரவு விருந்துக்கு அழைத்த பாஜக எம்.பி

தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்த பிரியங்கா காந்தியை இரவு விருந்துக்கு அழைத்த பாஜக எம்.பி

By: Karunakaran Tue, 28 July 2020 12:51:23 PM

தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்த பிரியங்கா காந்தியை இரவு விருந்துக்கு அழைத்த பாஜக எம்.பி

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்டு, சிஆர்பிஎப் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இசட் பிளஸ் பாதுகாப்பாகக் குறைக்கப்பட்ட ஒருவருக்கு அரசின் சார்பில் வீடு வழங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை என்பதால், டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள எண் 35, 5பி இல்லத்தை பிரியங்கா காலி செய்ய உத்தரவிடப்பட்டது.

மேலும், பிரியங்கா ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் வீட்டைக் காலி செய்து தர வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் அல்லது வாடகை வசூலிக்கப்படும் என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர விவகாரத்துறை கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டது.

bjp mp,anil baluni,priyanka gandhi,tea party ,பாஜக எம்.பி., அனில் பலூனி, பிரியங்கா காந்தி, தேநீர் விருந்து

தற்போது டெல்லியில் தங்கிக் கொள்ள குருகிராமில் செக்டர் 42 பகுதியில் தனியாக வீடு ஒன்றை தற்காலிகமாக பிரியங்கா காந்தி வாடகைக்கு எடுத்துள்ளார். பிரியங்கா காந்தி தங்கியிருந்த அரசு இல்லத்தை தற்போது பாஜக தேசிய ஊடகப்பிரிவு தலைவரும், எம்.பி.யுமான அனில் பலூனிக்கு மத்திய வீட்டுவசதித்துறை ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில் தான் தங்கியிருந்த வீட்டுக்கு புதிதாக குடியேற இருக்கும் பாஜக எம்.பி. அனில் பலூனிக்கு தேநீர் விருந்தளிக்க பிரியங்கா காந்தி கடிதம் மூலம் அழைப்பு விடுத்து உள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள எம்.பி. அனில் பலூனி, புற்றுநோய்க்கான சிகிச்சை முடிந்து நான் வீடு திரும்பி உள்ளேன் இப்போது, மருத்துவர்கள் என்னை வீட்டில் ஓய்வெடுக்கும் படி கேட்டு கொண்டுள்ளனர். லோதி பங்களாவிற்குள் நுழைந்தவுடன், இரவு விருந்துக்கு அழைப்பு விடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|