Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்-அமைச்சர் விரைவில் பூரண குணமடைந்து நலம்பெறவர் ... பாஜக தலைவர் அண்ணாமலை

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்-அமைச்சர் விரைவில் பூரண குணமடைந்து நலம்பெறவர் ... பாஜக தலைவர் அண்ணாமலை

By: vaithegi Tue, 12 July 2022 7:12:36 PM

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்-அமைச்சர் விரைவில் பூரண குணமடைந்து நலம்பெறவர் ... பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னை: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திகொண்டார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்' என பதிவிட்டுள்ளார்.

bjp leader,m.k.stalin ,பாஜக தலைவர் ,மு.க.ஸ்டாலின்

இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண குணமடைந்து நலம்பெற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து கூறினார்.

இது பற்றி அவர் கூறுகையில் "முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்தேன். அவர் பூரண குணமடைந்து மக்கள் சேவைக்கு விரைந்து வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Tags :