மின் கட்டண உயர்வு.....பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம்
By: vaithegi Mon, 18 July 2022 10:14:08 PM
சென்னை: மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மின் கட்டணத்தை திருத்தி அமைப்பது குறித்து தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக கூறி மேலும் மாற்றப்பட்டுள்ள புதிய கட்டண விபரங்களை அறிவித்தார்.
மேலும் வருவாய் மற்றும் கடன் சுமைகளை சுட்டிக் காட்டிய அமைச்சர், 8 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மின் கட்டணத்தை உயர்த்துவது மற்றும் கட்டண விபரங்களை கூறியுள்ளார்.
இந்நிலையில் மின் கட்டண உயர்வுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதை குறித்து அவர் டுவிட்டர் பதிவில், பல காரணங்களை கூறி தமிழகத்தின் மின் துறை அமைச்சர் அனைத்து தரப்பட்ட மக்களின் மின் கட்டணத்தை இன்று உயர்த்தி உள்ளார்.
மேலும் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் சிலரை பணக்காரர்களாக ஆக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித்தவித்து வருகிறது. இந்நிலையில் நீங்கள் செல்லச்செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா? என கேள்வி எழுப்பி உள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.