Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஐக்கிய ஜனதா தளத்தை தனிமைப்படுத்த பாஜக விரும்பியது... முதல்வர் நிதிஷ்குமார் குற்றச்சாட்டு

ஐக்கிய ஜனதா தளத்தை தனிமைப்படுத்த பாஜக விரும்பியது... முதல்வர் நிதிஷ்குமார் குற்றச்சாட்டு

By: Nagaraj Mon, 05 Sept 2022 06:55:10 AM

ஐக்கிய ஜனதா தளத்தை தனிமைப்படுத்த பாஜக விரும்பியது... முதல்வர் நிதிஷ்குமார் குற்றச்சாட்டு

பாட்னா: பீகாரின் ஏக்நாத் ஷிண்டேவாக ஆர்.சி.பி. சிங்கை மாற்றவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை தனிமைப்படுத்தவும் பா.ஜ.க. விரும்பியது என நிதிஷ் குமார் குற்றம் சாட்டினார்.

பீகாரின் பாட்னா நகரில் ஐக்கிய ஜனதா தள கட்சி மாநில அலுவலகத்தில் கற்பூரி அரங்கத்தில், அக்கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில், அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் என்ற லல்லன் பாபு தலைமையேற்றார். கூட்டத்தின்போது, பீகாரின் ஏக்நாத் ஷிண்டேவாக ஆர்.சி.பி. சிங்கை மாற்றவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை தனிமைப்படுத்தவும் பா.ஜ.க. விரும்பியது என நிதிஷ் குமார் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் முதல்-மந்திரி நிதீஷ் குமாரின் நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்தவர் ஆர்.சி.பி. சிங். 2013-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையில் சிங் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர் பெயர்களில் பதிவு செய்துள்ள அசையா சொத்துகளில் உள்ள முரண்பாடுகள் பற்றி கட்சி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.

bjp,accusation,prime minister,confusion,accusation,rcp singh ,
பாஜக, குற்றச்சாட்டு, முதல் மந்திரி, பரபரப்பு, குற்றச்சாட்டு, ஆர்.சி.பி.சிங்

தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து வெளியேறும் முடிவை கடந்த ஆகஸ்ட் தொடக்கத்தில் வெளியிட்டார். ஊழல் குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை என்றும் கூறினார். சட்டப்பூர்வ முறையில் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நிதி நிலை திறன் அடிப்படையில் சொத்துகள் வாங்கப்பட்டு உள்ளன என அவர் கூறி அதற்கான சான்றுகளையும் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் முஸ்தாபூர் பகுதியில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, தனி கட்சி உருவாக்குவது பற்றியும் கூறினார். பீகாரில் முதல்-மந்திரியின் நம்பிக்கைக்குரியவராக சிங் இருந்த நிலையில் அவர் இம்முடிவை எடுத்தது பரபரப்புடன் பேசப்பட்டது.

இந்த சூழலில், மராட்டியத்தில் ஏக்நாத் ஷிண்டேவை வைத்து பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடித்தது போன்று, பீகாரில் ஆர்.சி.பி. சிங்கை ஷிண்டேவாக ஆக்க பா.ஜ.க. விரும்பியது என்ற பரபரப்பு குற்றச்சாட்டை நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

Tags :
|