Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனி பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் பாஜ ஆட்சியை பிடிக்கும்... மத்திய அமைச்சர் சூளுரை

தனி பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் பாஜ ஆட்சியை பிடிக்கும்... மத்திய அமைச்சர் சூளுரை

By: Nagaraj Fri, 10 Mar 2023 7:17:43 PM

தனி பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் பாஜ ஆட்சியை பிடிக்கும்... மத்திய அமைச்சர் சூளுரை

கர்நாடகா: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்ற தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும். பிரதமர் மோடியின் தலைமையிலான பா.ஜனதாவின் செயல்பாடுகள் மூலம் பா.ஜனதா மீண்டும் கர்நாடகத்தில் ஆட்சிக்கு வரும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜோஷி தெரிவித்தார்.

கர்நாடக சட்டசபைக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருப்பதால், பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அடிக்கடி கர்நாடகம் வந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா சார்பில் விஜயசங்கல்ப யாத்திரை தொடங்கி நடந்து வருகிறது. நேற்று ஹாசனில் நடந்த விஜயசங்கல்ப யாத்திரையில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஷோபா ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஹாசன் மாவட்டம் பேளூரில் இருந்து ஹலேபீடு வரை நடந்தது. வழிநெடுகிலும் ஏராளமான பா.ஜனதா தொண்டர்கள் இந்த யாத்திரைக்கு உற்சாக வரவேற்பு நடத்தினர். இதையடுத்து அரிசிகீர, சக்லேஷ்புரா பகுதியிலும் விஜயசங்கல்ப யாத்திரை நடந்தது. அரிசிகெரேயில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

carrying,halebid,parties,sankalpa,welcome, ,என்ஜின், காங்கிரஸ், பிரசாரம், யாத்திரை

அப்போது அவர் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்ற தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும். பிரதமர் மோடியின் தலைமையிலான பா.ஜனதாவின் செயல்பாடுகள் மூலம் பா.ஜனதா மீண்டும் கர்நாடகத்தில் ஆட்சிக்கு வரும். இரட்டை என்ஜின் ஆட்சியால் மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்கிறது.

கர்நாடகத்துக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பா.ஜனதா அரசின் சாதனைகளை விளக்க நாங்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளோம். மக்கள் ஊழலுக்கு எதிராக வாக்களிப்பார்கள். காங்கிரஸ் கட்சியில் முதல்-அமைச்சர் பதவிக்கு போட்டி எழுந்துள்ளது.

ஊழலை பற்றி பேச காங்கரசுக்கு அருகதை கிடையாது. வழக்கில் சிறை சென்று வந்த டி.கே.சிவக்குமார், ஊழல் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. நாட்டில் நிறைந்த ஊழல் கட்சி காங்கிரஸ் தான். என்று அவர் கூறினார்.

Tags :