Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய அரசின் அவசர சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம்

மத்திய அரசின் அவசர சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம்

By: Nagaraj Fri, 17 July 2020 9:00:51 PM

மத்திய அரசின் அவசர சட்டத்தை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம்

விவசாய சங்கங்கள் அறிவிப்பு... விவசாயிகளை பாதிக்கக்கூடிய வகையில் மத்திய அரசால் கொண்டு வரப்படும் அவசர சட்டத்தை கண்டித்து 27ம்தேதி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடைபெறும் என அனைத்து விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது.

அரியலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். காவேரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத்தலைவர் இளங்கீரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்த சட்டம் 2020, மாநில அரசு அறிவித்துள்ள குதிரை திறனுக்கேற்ற கூடுதல் மின்கட்டண வைப்புத்தொகை, இலவச மின்சாரம் ரத்து, விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் உள்ளிட்ட சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் வாபஸ் பெறவேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ariyalur,agricultural associations,black flag,struggle ,அரியலூர், விவசாய சங்கங்கள், கருப்புக் கொடி, போராட்டம்

மேலும் இதனை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் முழுவதும் வருகின்ற 27ம் தேதி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்துவது.

இச்சட்டங்களை வாபஸ் பெறக்கோரி 20ம் தேதியில் இருந்து மாநிலம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்புவது உள்ளிட்ட போராட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

கூட்டத்தில் விவசாய சங்க பொருப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத்தலைவர் ராஜேந்திரன், மத்திய, மாநில அரசுகளின் அவசர சட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துள்ளது. எனவே இச்சட்டங்களை வாபஸ் பெறக்கோரி 27ம்தேதி விவசாயிகளின் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் என்று கூறினார்.

Tags :