கறுப்பினத்தை சேர்ந்தவர் ரொறன்ரோ காவல்துறை தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா
By: Nagaraj Tue, 09 June 2020 7:43:43 PM
பதவியை இராஜினாமா செய்த பொலிஸ்துறைத் தலைவர்... கனடாவின் மிகப்பெரிய நகராட்சி பொலிஸ் சேவையின் முதல் கறுப்பினத் தலைவரான ரொறன்ரோவின் பொலிஸ்துறைத் தலைவர் மார்க் சாண்டர்ஸ், தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.
ரொறன்ரோ பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தி மாநாட்டில் சாண்டர்ஸ் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
சாண்டர்ஸின் பணிக்கால ஒப்பந்தத்தில் இன்னமும் எட்டு மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில், எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதியுடன் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். (சாண்டர்ஸின் ஒப்பந்தம் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை உள்ளது)
ரொறன்ரோவை பாதுகாப்பாக வைத்திருப்பதில் எங்களுக்காக நீங்கள் உருவாக்கிய கூட்டாண்மைக்கு ரொறன்ரோவின் குடிமக்கள் மற்றும் சமூகங்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன் என்றும் கூறினார்.
2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சேவையில் முதல் பட்டத்தை வகித்த சாண்டர்ஸ், ரொறன்ரோ பொலிஸ் சேவையின் பல பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். இதில் கொலை, தொழில்முறை தரநிலைகள் மற்றும் அவசர பணிக்குழு ஆகியவை அடங்கும்.