Advertisement

இத்தாலியில் கருப்பின வாலிபர் ஒருவர் அடித்துக்கொலை

By: Karunakaran Sun, 13 Sept 2020 09:26:05 AM

இத்தாலியில் கருப்பின வாலிபர் ஒருவர் அடித்துக்கொலை

அமெரிக்காவில் கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின வாலிபர் போலீஸ் அதிகாரி பிடியில் சிக்கி கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் அமெரிக்கா முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன.

மேலும் ஐரோப்பிய நாடுகளில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. தற்போது, ஐரோப்பிய நாடான இத்தாலியில் கருப்பின வாலிபர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் ரோமின் புறநகர் பகுதியான கோலிபுரோ நகரைச் சேர்ந்த வில்லி மான்டீரோ துதர்தே என்கிற 21 வயது கருப்பின வாலிபரை வெள்ளை இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அடித்து கொலை செய்தனர்.

black youth,beaten,death,italy ,கறுப்பின இளைஞர்கள், தாக்குதல், மரணம், இத்தாலி

பிரதமர் கியூசப் காண்டே உள்பட அரசின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது, வில்லி மான்டீரோ துதர்தேவின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த இறுதி ஊர்வலத்தில், பிரதமர் கியூசப் காண்டே மற்றும் அந்த நாட்டின் உள்துறை மந்திரி ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் கருப்பின வாலிபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags :
|
|