சவூதியின் கடற்கரை நகரமான ஜித்தாவில் வெளுத்தெடுத்த மழை
By: Nagaraj Fri, 25 Nov 2022 6:57:50 PM
சவூதி: வெளுத்தெடுத்த கனமழை... மேற்கு சவூதி அரேபியாவில் உள்ள கடற்கரை நகரமான ஜித்தா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழைக்கு 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், மழை காரணமாக விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. பள்ளிகளும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என அரசு தனது ட்விட்டர் பக்கத்தில்
தெரிவித்துள்ளது. மக்காவிற்கு யாத்ரீகர்கள் சென்று வந்த பாதை மழை
தொடங்கியவுடன் மூடப்பட்டது.
ஜெட்டா கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும்
குளிர்கால மழை மற்றும் வெள்ளத்தை அனுபவிக்கிறது. 2009 வெள்ளத்தில் 123
பேரும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மேலும் 10 பேரும் உயிரிழந்தனர்.
Tags :
rain |