Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள மதுக்கடைகளை மூடக்கோரி முற்றுகை

குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள மதுக்கடைகளை மூடக்கோரி முற்றுகை

By: Nagaraj Fri, 03 Feb 2023 10:06:18 PM

குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள மதுக்கடைகளை மூடக்கோரி முற்றுகை

புதுச்சேரி: மதுக்கடைகளை மூடக்கோரி முற்றுகை... புதுச்சேரியில் குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள மதுக்கடைகளை மூடக்கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மகளிர் அமைப்பினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்ற அனைத்து மகளிர் கூட்டமைப்பினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

அவர்கள் தடையை மீறியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

puducherry,struggle,women , புதுச்சேரி, பெண்கள், போராட்டம், போலீசார், சமாதானம்

குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள மதுக்கடைகளை மூடவும், மூடப்பட்ட நியாயவிலைக் கடைகளை திறக்கவும் வலியுறுத்தினர். மின்சாரம், சமையல் எரிவாயு மற்றும் காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்தாமல் மதுபான கேளிக்கை விடுதிகளை மட்டும் அரசு திறக்கிறது என்று பெண்கள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

எந்தப் பலனும் கிடைக்காத புதுச்சேரியை விட்டு தமிழகத்திற்கு இடம் பெயர்வோம் என்றனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

Tags :