மும்பை உயர்நீதிமன்ற அவுரங்காபாத் கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல்
By: Nagaraj Thu, 16 Feb 2023 11:53:27 AM
அவுரங்காபாத்: மும்பை உயர்நீதிமன்ற அவுரங்காபாத் கிளையில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் மிரட்டல் வந்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மராட்டிய போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 5.45 மணிக்கு அழைப்பு வந்தது. இதுகுறித்து பேசிய ஆசாமி, “நான் பணம் கொடுத்தேன். ஆனால் என் வேலை முடியவில்லை.
இதனால் மும்பை உயர்நீதிமன்ற அவுரங்காபாத் கிளையில் வெடிகுண்டு இருப்பதாக கூறி அழைப்பை துண்டித்துவிட்டார் .இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருடன் கோர்ட்டுக்கு சென்று 2 மாடிகள், வாகன நிறுத்துமிடம் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இது வெறும் புரளி என்று தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.