தொடர் அமளி ... இன்றும் இரு அவைகளும் ஒத்திவைப்பு
By: vaithegi Tue, 21 Mar 2023 2:08:48 PM
தொடர் அமளி காரணமாக 7 ஆவது நாளாக இன்று நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு .... அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரணை கோரி மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பியதால் மக்களவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, மதியம் 1 மணிக்கு தனது அறையில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள் அழைப்பு ஒன்றை விடுத்தார்.
மேலும், மாநிலங்களவையும் இன்று மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்ததோடு, அதற்கு முன்னர் 11.30 மணிக்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கூட்டத்துக்கு ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தன்கர் அவள் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனை அடுத்து பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் துவங்கியது. ஆனால் அப்பொழுதே, எதிர்க்கட்சியினர் மற்றும் ஆளும் கட்சியினர் இடையே தொடர் அமளி ஏற்பட்டதால் தொடர்ந்து இரு அவைகளும் முடங்கியது.