Advertisement

நாடாளுமன்ற இரு அவைகளும் 5-வது நாளாக ஒத்திவைப்பு

By: vaithegi Fri, 17 Mar 2023 2:40:35 PM

நாடாளுமன்ற இரு அவைகளும் 5-வது நாளாக ஒத்திவைப்பு

இந்தியா: ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு ... நாடாளுமன்றம் கடந்த 4 நாளாகவே ஆளும் கட்சினர் மற்றும் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியால் முடங்கிய நிலையில் இன்று 5-வது நாள் காலையில் கூட்டத்தொடர் தொடங்கியதுமே, ஆளும் கட்சியான பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

எனவே இதன் விளைவாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வருகிற திங்கள் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் கட்சியும், அதானி குழும விவகாரம் குறித்து தொடர் விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சியினரும் அமளியில் ஈடுபட்டதால், இன்று நாள் முழுவதும் அவைகள் ஒத்திவைக்கப்பட்டது.

both houses,parliament ,இரு அவை,நாடாளுமன்றம்

இதை தொடர்ந்து 5-வது நாளாக நாடாளுமன்றம் முடங்கிய நிலையில், திங்கள் கிழமை காலை 11மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடுகின்றன.

இந்த வாரம் திங்கள்கிழமை தொடங்கிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து 5 நாள்களாக எந்த விவாதமும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :